வெட்டப்பட்ட தன் கையைத் தூக்கிக்கொண்டு கதறியபடி ஓடிவந்த நபர்: அதிர்ச்சியடைய வைத்த ஒரு சம்பவம்
அமெரிக்காவில், வெட்டப்பட்ட தன் கையை மற்றொரு கையில் பிடித்துக்கொண்டு கதறியபடி ஓடிவந்த ஒருவரைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை, Lewiston என்ற இடத்தில், சந்தை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர், திடீரென சத்தமிட்டபடி ஓடி வரவே, அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அவரது ஒரு கையில், வெட்டப்பட்ட அவரது இன்னொரு கை இருந்திருக்கிறது. தடுமாறியபடி வந்த அவரை பொதுத்துறைப் பணியாளர்கள் இருவர் கவனிக்க, அவர்கள் ஓடோடிச் சென்று, அவருக்குக் கட்டுப்போட்டு, இரத்தம் வெளியேறுவதைத் தடுத்துவிட்டு ஆம்புலன்சை அழைத்துள்ளார்கள்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அந்த இருவர் சரியான நேரத்தில் செய்த முதலுதவியின் காரணமாக உயிர் பிழைத்துவிட்டார்.
உலோகம் வெட்டும் மின்சார ரம்பம் ஒன்றைக் கொண்டு வேலை செய்துகொண்டிருந்த அந்த நபரின் கை, அந்த ரம்பத்தில் சிக்கி, அவரது தோள்பட்டைக்கு சற்று கீழ் பகுதியில் வெட்டுப்பட்டிருக்கிறது.
அவர் உயிர் பிழைத்துவிட்டாலும், மருத்துவர்கள் அந்தக் கையைப் பொருத்தினார்களா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.