திருமணத்தில் போடப்பட்ட பாடல் - காதலி நியாபகம் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்
திருமணத்தில் பரிமாறப்பட்ட சாப்பாடு சரியில்லை, வரதட்சிணை குறைவாக உள்ளது போன்ற சில காரணங்களால், திருமணம் கடைசி நேரத்தில் நின்று விடும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
ஆனால், டெல்லியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், DJ குழுவினரால் போடப்பட்ட பாடலால் திருமணம் நின்றுள்ளது.
பாடலால் நின்ற திருமணம்
ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஏ தில் ஹை முஷ்கில்' என்ற படத்தில் வரும் 'சன்னா மெரேயா' என்ற பாடல், காதல் முறிவு பாடலாகும்.
டெல்லியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், DJ குழுவினர் இந்த பாடலை இசைத்த போது, மேடையில் இருந்த மணமகனுக்கு தன்னுடைய முன்னாள் காதலியின் நினைவு வந்துள்ளது.
இதனால், மணமகன் திருமணத்தை நிறுத்தி விட்டு, உடனடியாக மேடையில் இருந்து கிளம்பியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் தளத்தில், Gaurav Kumar Goyal என்பவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருமணத்திற்கு முன்னரே, மணமகன் தனது உண்மையான உணர்வுகளை உணர உதவியதற்காக பாடலை இசைத்த DJவிற்கு பலரும் அந்த பதிவில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
1998 ஆம் ஆண்டு, பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் தமிழில் வெளியான 'ஜோடி' திரைப்படத்தில், 'ஒரு பொய்யாவது சொல் கண்ணே' பாடல் பாடப்படும் போது, இதே போல் சிம்ரன் திருமணத்தை நிறுத்துவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |