அடையாளம் தெரியாமல் மாறி போன விஜயகாந்த்! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வேதனை
நடிகர் விஜயகாந்த் தனது மகன் விஜய பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு கேக் ஊட்டிவிடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் அடையாளம் தெரியாத அளவுக்கு கேப்டன் மாறிவிட்டாரே என வேதனை தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சில ஆண்டுகளாக உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். சிங்கக் குரலில் கர்ஜித்த விஜயகாந்த் தற்போது பேச முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
அவருக்கு வெளிநாடுகளில் பேச்சு பயிற்சி கொடுக்கப்பட்டு சிகிச்சையும் கொடுக்கப்பட்டு வந்தது. அண்மையில் மகன் விஜய பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாளுக்கு விஜயகாந்த் தனது மகனுக்கு ஆசையாக கேக் ஊட்டி விட்டார்.
புகைப்படம்
அந்த புகைப்படத்தை விஜயபிரபாகரன் வெளியிட்டுள்ளார். அதில் விஜயகாந்தின் கைகளை பார்க்கும் போது ரசிகர்களின் இதயமே நொறுங்குவது போல் உள்ளது. ஏனெனில் விஜயகாந்த்தா இது என அடையாளம் தெரியாத அளவுக்கு அந்த புகைப்படம் இருக்கிறது.
ஏனெனில் அவர் பலவீனமாக இருப்பது போல தெரிகிறது என ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ள நிலையில் அவர் மீண்டும் பழையபடி மாற பிரார்த்தனை செய்வதாக கமெண்ட் செய்துள்ளனர்.