சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது!
டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதை கண்டித்து வாலாஜா சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அஇஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று சட்டப்பேரவையில் டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துனட் இணைக்கும் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார்.
ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்தை ஆரம்ப நிலையிலே எதிர்க்கிறோம் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட முன்வடிவை தாக்கல் செய்வதை கண்டித்து அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டவாரே சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அஇஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து சாலை அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
சாலை மறியலில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உட்பட அஇஅதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டகாவல்துறையினர், பின்னர் அனைவரையும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி வாகனத்தில் அழைத்துச்சென்றனர்.