உதயநிதி ஸ்டாலின் கைது - தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யபட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்
காவேரி விவகாரம் தொடர்பாக தவெக அரசை கண்டித்து திமுக சார்பில் நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

இதில், நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக அவர் மீது தஞ்சாவூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் வீட்டில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
அவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினின் வீட்டின் முன்பு குவிந்தனர்.
கடும் எதிர்ப்பையும் மீறி உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் வாகனத்தில் தஞ்சாவூர் அழைத்து செல்லப்படுகிறார். அவருடன் கே.என்.நேரு, மாசுப்ரமணியன் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் உடன் செல்கின்றனர்.
உதயநிதி ஸ்டாலினின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய்யின் உருவபொம்மையை திமுகவினர் எரித்துள்ளனர். இதனையடுத்து அங்குள்ள தவெக கொடிகளை தூக்கி வீசி எறிந்ததால் திமுக மற்றும் தவெகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ள திமுக தலைவர் முகஸ்டாலின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |