திமுக வெற்றி குறித்து...விஜயகாந்த் முதல் முறையாக வெளியிட்ட அறிக்கை: என்ன சொல்லியிருக்கார் பாருங்க
தேமுதிக கட்சியின் தலைவரான விஜயகாந்த் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமாற ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று திமுக இந்த முறை ஆட்சியமைக்கிறது. வரும் 7-ஆம் திகதி ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளார்.
இதையடுத்து அவருக்கு எடப்பாடி பழனிச்சாமி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன்ர. அந்த வகையில், தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன்.
தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் & வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன்.
— Vijayakant (@iVijayakant) May 3, 2021
தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் & வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/yj2FK1l07h