பேன் தொல்லை உங்களை பாடாய்படுத்தி எடுக்குதா? அதனை நீக்க இயற்கை முறைகள்
பொதுவாக குழந்தைகளும் சரி பெண்களும் சரி அதிகம் பேன் தொல்லையால் அவதிப்படுகிறார்கள்.
முடி வளர்ச்சி அதிகமாக உள்ளவர்களுக்கும், கூந்தலை சுத்தமாக பராமரிக்காதவர்களுக்கும் பேன் அதிகம் வரும் வாய்ப்புகள் உள்ளது. தலைமுடிகளில் ஈரம், பிசுபிசுப்பு, அழுக்கு போன்றவை சேர்ந்தால் கட்டாயமாக பேன் பரவும்.
மேலும் ஒருவர் பயன்படுத்திய டவல், சீப்பு, ஹேர் பிரஷ் போன்றவற்றை எடுத்துப் பயன்படுத்தினாலும் அதன் வழியே பேன் ஒட்டிக்கொண்டு நமது முடிகளுக்குள் நுழைந்து விரைவாகப் தொடங்கிவிடும்.
எனவே இவற்றை அடியோடு நீக்க ஒரு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- எலுமிச்சைச்சாறு ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை ஒரு துணியில்நன்றாக நனைத்து மயிர்க்கால்களில் பூசவேண்டும் பின்னர் Bath Cap மூலம் நன்றாக கவர் செய்யபட வேண்டும்.பின் முடியியை கழுவும்போது பேன் தானாகவே வெளியேறிவிடும்.
- வேப்ப எண்ணெய்யும் தேங்காய் எண்ணெய்யும் சேர்த்து கலந்து தலையில் பூச வேண்டும். 1 மணி நேரம் சென்றதும் தலையை நன்றாக கழுவி குளிக்கவும். இப்படி தொடர்ந்து 3 வாரங்களுக்கு செய்து வந்தால் பேன் பிரச்சினை மற்றும் நீண்ட நாட்களாகஇருக்கும் ஈறு - பொடுகு போன்றவை நீங்கும்.
-
வேப்பிலையை மைபோன்று நன்றாக அரைத்து தலையில் பூசி சிறிது நேரம் சென்ற பின்னர் கழுவினால் பேன் முற்றாக நீங்கிவிடும். இரண்டு வாரங்களுக்கு ஒருதடவை இதை செய்யலாம்.
-
இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை நன்றாக ஊறவைத்து அதில் அரைகப் தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு மைபோல் அரைத்து இதனுடன் 3 SPOON எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தலைமுடியில் தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து பின்பு குளித்தால் சீக்கிரம் பேன் மற்றும் பொடுகு பிரச்னை நீங்கும்.
-
சீதாப்பழத்தின்விதைகளை இரண்டு நாட்கள் நன்றாக சூரிய வெப்பத்தில் உலர வைத்து தூள் செய்து தேங்காய் எண்ணையுடன் கலந்து வைத்துகொள்ளுங்கள் இதை இரவில் தலைக்குத் வைத்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் பேன்கள் தொல்லை நீங்கும்.
-
குப்பை மேனி இலைகளை அரைத்து சாறு பிழிந்து அதை தலையில் தடவி தலையில் அரைமணி நேரம் நன்றாக ஊறவைத்து பின் கழுவினால் பொடுகுத் தொல்லை பேன் தொல்லை சரியாகும்.