பாலையும் மீனையும் ஒன்றாக சாப்பிட்டால் இந்த ஆபத்தை ஏற்படுத்துமாம்! ஜாக்கிரதையாக இருங்க
பொதுவாக நாம் ஆரோக்கியம் என்று நினைக்கு சில உணவுகள் நமக்கும் சில சமயங்களில் ஆபத்தை விளைவிப்பதாக அமைகின்றது.
அப்படிப்பட்ட ஒரு உணவு தான் பாலும் மீனும் இதனை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது ஆபத்தானது என்று சொல்லப்படுகின்றது.
இவை இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா ? கூடாதா என்பதை இங்கே பார்ப்போம்.
image - timesofindia
அறிவியல், ஆயுர்வேதம் என்ன சொல்கின்றது?
அறிவியல் கூற்றப்படி இதில் ஏதாவது ஒரு பொருளால் அலர்ஜி இருக்க வேண்டும். அதனை தவிர்த்து இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேறு எந்த காரணமும் இல்லை என்று சொல்கின்றது.
ஆயுர்வதத்தின் படி மீன் என்பது அசைவ உணவை சேர்ந்தது, பாலானது விலங்கிலிருந்து பெறப்படும் பொருளாக இருந்தாலும் அது சைவ உணவுவகையை சார்ந்தது இதனால் இந்த இரண்டு உணவையும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது கூறுகின்றது.
எப்போது சாப்பிடக்கூடாது?
மீன் சரியாக சமைக்கப்படாததாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சினை இருந்தால் மட்டுமே இந்த இரண்டு உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.
மீறி சாப்பிட்டால் அலர்ஜிகள், சரும பிரச்சினைகள், வயிறு கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
விளைவுகள் என்ன?
பால் குளிர்ச்சி தன்மையுடையது, அதேபோல மீன் வெப்பத்தன்மையுடையது. இது இரண்டும் ஒரேநேரத்தில் சாப்பிடப்படும் போது அது உங்கள் உடலில் சமநிலையின்மையை ஏற்படுத்தும், இதனால் உங்கள் உடலில் இரசாயன மாற்றங்கள் ஏற்படலாம்.
யார் தவிர்க்க வேண்டும்?
நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள் மட்டும் இந்த உணவுகளை ஒரே நேரத்தில் தவிர்க்க வேண்டும்.
முடிவு
பாலும், மீனும் நாள்பட்ட நோய்களை குணப்படுத்த இந்த இரண்டு உணவையும் ஒன்றாக பயன்படுத்துகிறார்கள். அலர்ஜிகளும், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்களை தவிர இதனை அனைவரும் சாப்பிடலாம்.