முகத்தில் அதிகம் எண்ணெய் வழியுதா? அதனை எப்படி எளியமுறையில் தடுக்கலாம்?
                    
                Beauty Tips
            
                    
                Skin Problem
            
                    
                Oil Face
            
                    
                Summer Problem
            
            
        
            
                
                By Kishanthini
            
            
                
                
            
        
    பொதுவாக பல பெண்கள் சந்திக்கின்ற சரும பிரச்சனை தான் முகத்தில் எண்ணெய் வழிவது.
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனையை அதிகமாக சந்தித்து இருப்பார்கள்.
இதற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் ஹார்மோன்களின் பிரச்சினை தான்.
இந்த சரும பிரச்சனையை இயற்கையான முறையில் சரி செய்ய பல வழிகள் உள்ளது. தற்போது அவற்றை தடுக்க என்ன வழிகள் உள்ளது என்று பார்ப்போம்.

- ஆரஞ்சு பழத்தின் சாற்றினை ஒரு பௌலில் பிழிந்து எடுத்து, அதனை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இதனால் எண்ணெய் பசை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்க உதவும்.
 - முகம் மற்றும் சருமத்திலுள்ள எண்ணெய்ப் பசையைக் குறைப்பதற்கு தக்காளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதிலுள்ள அதிகப்படியான வைட்டமின் சி சருமத்துக்கு பொலிவையும் புத்துணர்வையும் தருகிறது. முகத்திலுள்ள மாசுக்களை நீக்கி சுத்தமாக வைத்திருக்கும்.
 - முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க  கடைந்த மோரை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும்.
 
பின்பு 15 நிமிடம் வரை காத்திருக்கவும், பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் வழியும் எண்ணெய் மறைந்து விடும்.
 - பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவ வேண்டும். இது ஆழமாக சுத்தம் செய்வதோடு, எண்ணெய் சுரப்பையும் சரிசெய்ய உதவும்.
 - சந்தன பவுடர் மஞ்சள் தூளை சரிசம அளவில் எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
 - சிறிது துளசி இலைகளை எடுத்து, நீரில் கழுவி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
 - முட்டையின் வெள்ளைக்கருவுடன், சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
பின் அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரால் முகத்தை மீண்டும் கழுவ வேண்டும்.
 - ரோஸ் வாட்டரை பஞ்சுருண்டையில் நனைத்து, அதைக் கொண்டு தினமும் முகத்தை காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் துடைத்து எடுக்க வேண்டும்.
இப்படி ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பது தடுக்கப்படுவதோடு, முகம் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.
 
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US