கோலாகலமாக இன்று தொடங்கும் 19 வது ஐபிஎல் திருவிழா: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடரில் வெற்றி பெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
ஐபிஎல் திருவிழா
19வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வைத்து தொடங்குகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை செய்கின்றனர்.

10 அணிகள் விளையாடும் ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்கி மே 31ம் திகதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றனர். மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த போட்டிகள் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கியமான 13 நகரங்களில் வைத்து நடைபெறுகிறது.
பரிசுத் தொகை எவ்வளவு?
இந்நிலையில் 19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும். அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ஆனால் ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அதே சமயம் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்ட நிலையில், அதே ரூ.20 கோடி பரிசுத் தொகையாக இந்தாண்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |