நீங்கள் க்ரில் சிக்கனை விரும்பி சாப்பிடுபவரா? உஷாரா இருங்க.. புற்றுநோயை ஏற்படுத்துமாம்
இன்று எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுகளில் க்ரில் சிக்கனும் ஒன்றாகும்.
ரோட்டோர ஹோட்டல் கடைகளில் எங்கு பார்த்தாலும் இந்த க்ரில் மாமிச உணவுகள் தான் தொங்க விடப்பட்டு சுடச்சுட பரிமாறப்படுகிறது.
என்னத்தான் இது சுவையை தந்தாலும் இதில் பக்கவிளைவுகளும் உண்டு.
பக்கவிளைவு
க்ரில் வகை மாமிச உணவுகளை சாப்பிடுவதால் புற்று நோய் வருகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பார்பிக்யூ போன்ற ரெஸ்டாரென்ட்களில் பயன்படுத்தப்படும் எண்ணெயில் PHA என்ற நச்சுப்பொருள் உள்ளது.
இது சருமத்தின் வழியாக ஊடுருவி உடலுக்கு கேடு விளைக்க கூடியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, பன்றிக்கறி, வான்கோழி என எந்த வகையான இறைச்சியை கிரில்லில் வைத்து சுடும் போதும், அதில் இருந்து வெளிப்படும் பாலிசைக்ளிக் அரோமெடிக் ஹைட்ரோகார்பன் மற்றும் ஹீடெரோசைக்ளிக் அமைன்ஸ் என்ற வேதிப்பொருளே புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.
இதனை தடுக்க என்ன செய்யலாம்?
இந்த வேதிப்பொருள் வெளியேறுவதை தடுக்க கிரில் செய்யக்கூடிய இறைச்சி துண்டுகளுக்கு இடையே வெங்காயம், குடைமிளகாயை குத்தி சமைக்க வேண்டும். அப்படி செய்தால் பாலிசைக்ளிக் அரோமெடிக் ஹைட்ரோகார்பன் மற்றும் ஹீடெரோசைக்ளிக் அமைன்ஸ் சுரக்காது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கியகுறிப்பு
க்ரில் சிக்கனில் உள்ள கருகிப் போன எலும்பை சாப்பிடக் கூடாது. இதையெல்லாம் பின்பற்றினால் பாதுகாப்பாக கிரில் உணவை சுவைக்கலாம்.