ஒற்றைத் தலைவலியால் அவதியா?
ஒற்றைத் தலைவலி என்பது தலையின் ஒரு பக்கம் மட்டும் வலி ஏற்படுவதாகும். சாதாரணமாக தலைவலிவந்தால் கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒற்றைத் தலைவலி என்பது சாதாரண தலைவலி போன்று கிடையாது. அதை தாங்கிக் கொள்ளவே முடியாது.
ஒற்றைத் தலைவலி ஏற்பட ஏராளமான காரணங்கள் உள்ளன. நிறைய பேருக்கு அவர்கள் தீராத மன அழுத்தத்தில் இருந்தாலோ, பயம், அதிர்ச்சி, டென்ஷன் கூட ஒற்றைத் தலைவலியை தூண்டுகிறது.
இரவில் அதிக போதுமான தூக்கம் இல்லாமல், அதிக நேரம் விழித்துக் கொண்டு இருந்தால் கூட இந்த ஒற்றைத் தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இப்படி அடிக்கடி ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் கண்டிப்பாக நீங்கள் அதை கவனிக்க வேண்டும்.
அதிலும் இந்த ஒற்றைத் தலைவலியைப் போக்க என்றே சில மூலிகை டீக்கள் உள்ளன. இது உடனடி நிவாரணம் தரக்கூடிய வகையில் உதவுகின்றது.
அந்தவகையில் தற்போது ஒன்றைத்தலைவலியால் அவதிப்படுவர்கள் குடிக்க வேண்டிய மூலிகை டீகள் பற்றி இங்கே பார்ப்போம்.
- கெமோமில் ஹெர்பல் டீ கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும். உடல் மற்றும் மூளை நரம்புகளை அமைதிப்படுத்தும். தலைவலியை ஏற்படுத்தும் வீக்கத்தை குறைக்க இந்த கெமோமில் ஹெர்பல் டீ உதவும்.
- மிளகுக்கீரை தேநீர் புத்துணர்ச்சியூட்டும் பானம் மட்டுமின்றி உங்களின் பதற்றத்தைக் குறைக்கும். அத்தோடு தலைவலிக்கு சிகிச்சையளிக்கவும் மிளகுக்கீரை தேநீர் நல்லது என்று கூறப்படுகிறது.
- மிளகுக்கீரை தேநீர் புத்துணர்ச்சியூட்டும் பானம் மட்டுமின்றி உங்களின் பதற்றத்தைக் குறைக்கும். அத்தோடு தலைவலிக்கு சிகிச்சையளிக்கவும் மிளகுக்கீரை தேநீர் நல்லது.
- இஞ்சி டீ உங்கள் தலையில் ஏற்படும் வலியைத் தணிக்க உதவும். உங்களுக்கு தலைவலி ஏற்படுவது போன்று நீங்கள் உணர்ந்தால் அப்போதே நீங்கள் இஞ்சி டீ தயாரித்து அருந்தலாம்.
- நீங்கள் தூங்கச் செல்லும் முன் குடிப்பதற்கு சிறந்த தேநீர் தான் லாவெண்டர் டீ தான். இதில் உள்ள பல மூலிகை மருந்துகள் உங்களுக்கு ஏற்படும் கவலை மற்றும் தலைவலிக்கு சிகிச்சைக்கு சிறந்தது. இரவில் தூங்கச் செல்லும் முன் லாவண்டர் டீ குடித்துவிட்டு தூங்கினால் நல்ல தூக்கம் உண்டாகும். காலையில் மிகவும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.