சளித்தொல்லையா? இதனை வெளியேற்ற தினமும் இந்த நாட்டு மருந்தை ஒரு டம்ளர் குடிங்க போதும்
இன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் சளி இருமல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் சாதாரண சளித் தொல்லைக்கு அவர்களால் மருத்துவமனைக்கு செல்ல இயலாது.
மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு சில இயற்கை வழிமுறைகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- தேன் – 100 கிராம்
- தண்ணீர் – 100 மிலி
- எலுமிச்சை சாறு – 4 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி – 1 இன்ச் (துருவியது)
- ஓட்ஸ் – 50 கிராம்
செய்முறை
முதலில் ஓட்ஸை நீரில் ஒருமுறைக் கழுவிக் கொண்டு, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 100 மிலி நீரை ஊற்றி, துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை அடுப்பில் ஓட்ஸ் வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி குளிர வைக்கவும்.
பிறகு அதைக் குளிர வைத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் அந்த பானத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 30-40 மிலி பருக வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து 40 நாட்கள் பருகி வந்தால், சளி முற்றிலும் வெளியேறி, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்திருப்பதை நன்கு உணரலாம்.
இந்த முறையை 15 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் 40 நாட்கள் பின்பற்றலாம்.
குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
குழந்தைகள் தான் அதிக அளவில் சளி பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள். எனவே இந்த பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும். கண்டிப்பாக, இந்த பானத்தைக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு சளி பிரச்சனை முற்றிலும் நீங்குவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும்.