காதுக்குள் கேட்ட விசித்திர சத்தம்! மருத்துவ பரிசோதனையில் வெளியான உண்மை.. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சீனாவில் ஒரு பெண்ணின் காதில் உயிருடன் சிலந்தி பூச்சி வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் ஒருவர் சீனாவில் வசித்து வரும் நிலையில் அவரது காதுக்குள் ஒரு விசித்திர சத்தம் கேட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் தாங்கமுடியாத வலியையும் அனுவபித்து வந்துள்ளார்.
இதனால் பதறி போன பெண் தனது குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காதில் எதோ அடைப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து பெண்ணின் காதில் கேமராவை வைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது காதின் உட்புறத்தில் ஒரு சிலந்தி பூச்சி உயிருடன் இருந்துள்ளது. இதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஒரு நாள் இரவு முழுவதும் அவரின் காதில் அந்த சிலந்தி பூச்சி உயிருடன் இருந்ததால் அவருக்கு வலியை ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் காதுக்குள் சாம்பல் நிறத்தில் இருந்த சிலந்தியை எலக்ட்ரிக் ஓட்டோஸ்கோப் கருவி மூலம் மருத்துவர்கள் வெளியேற்றி உள்ளனர். சிலந்தி பூச்சியை காதுக்குள் இருந்து வெளியே எடுத்த பிறகு அவருக்கு வலி குறைந்தது.