திருமண நிச்சயமான பெண் அனுப்பிய புகைப்படங்கள்! மருத்துவரின் மோசமான செயல்..அடுத்து நடந்த விபரீதம்
விகாஸ் ராஜன் பெண்ணின் புகைப்படங்களை போலி ஐடி உருவாக்கி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்
பிரதிபா புகைப்படங்கள் வெளியானது குறித்து கேட்டபோது விளையாட்டாக செய்ததாக மருத்துவர் கூறியுள்ளார்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் மருத்துவர் ஒருவர், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக வேலை பார்த்து வந்தவர் விகாஸ் ராஜன். இவருக்கும் பிரதிபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விகாஸ் ராஜன், கோமா நிலைக்கு சென்று பின்னர் மூன்று நாட்களில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரதிபா தனது நண்பர்களுடன் சேர்ந்து விகாஸ் ராஜனை மருத்துவமனையில் அனுமதித்தது தெரிய வந்தது. உடனடியாக பொலிஸார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பிரதிபா அவரது நிர்வாண புகைப்படங்களை விகாஸிற்கு அனுப்பியிருந்தார். அவற்றை விகாஸ் ராஜன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனை அறிந்த பிரதிபா அவரிடம் கேட்டபோது விளையாட்டாக பகிர்ந்ததாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரதிபா, நண்பர்களை சந்திக்க செல்லலாம் எனக் கூறி விகாஸை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட கைகலப்பில் அப்பெண்ணின் நண்பர்கள் விகாஸை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவர்களின் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பொலிஸார், பிரதிபா மற்றும் அவரது மூன்று நண்பர்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.