கர்ப்பகாலத்தில் அதிக உடல் எடை பாதிப்பை ஏற்படுத்துமா?
கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு தேவையான போஷாக்குள்ள உணவுகளை உட்கொண்டு கர்ப்பிணி தாய்மார் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
அதிலும் சிலருக்கு உடல் எடை அதிகரிக்குமா என்று ஒருசிலர் பயப்படுவர்.
பொதுவாகவே பெண்கள் உடல் எடை குறித்து கவனத்தோடு இருப்பார்கள். இருந்தாலும் கர்ப்ப காலத்தில் உணவு திட்ட அமைப்பின்படி உண்ணாமல் குழந்தைக்கு எது ஆரோக்கியம் கொடுக்கிறதோ அதன் படியே உண்ண வேண்டும்.
அதிலும் கர்ப்ப காலத்தில் நீங்கள் உங்கள் எடையை இலக்காக வைத்திருப்பதை உறுதிப்படுத்த உங்கள் மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை பெறவேண்டும். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு எடையை அதிகரிப்பது நல்லது.
ஏனெனில் அதிக எடை ஒரு சில பாதிப்புக்களை ஏற்படுத்தும். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
அதிக உடல் எடை பாதிப்பை ஏற்படுத்துமா?
அதிக எடை அதிகரிப்பது கர்ப்ப காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். மேலும் பிரசவத்திற்குப் பிறகு கூடுதல் பவுண்டுகளை இழப்பது என்பது கடினம் மற்றும் கர்ப்பகாலத்தில் போதுமான அளவு எடை அதிகரிக்காமல் இருப்பது குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கும்.
எனவே, ஆரோக்கியமான, சீரான உணவை உட்கொள்வது குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறவும் ஆரோக்கியமான விகிதத்தில் வளரவும் உதவும்.
கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை இருக்க வேண்டும்?
ஒரு பெண் கர்ப்ப காலத்தில் 10 முதல் 14 கிலோ வரை, சராசரியாக 12 கிலோவைப் பெற வேண்டும்.
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு ஆரோக்கியமான எடையில் இருந்த பெண்கள், கர்ப்பம் தரித்த பிறகு ஒரு நாளைக்கு 2,200 முதல் 2,900 கலோரிகள் எடுத்துக்கொள்வது அவசியம்.
ஆரோக்கியமான பிரசவத்திற்கான வழிமுறைகள் என்ன?
- உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதன்படி உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம்.
-
தேவையற்ற சீனி சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து பழங்கள் போன்று இயற்கையான சீனி சேர்க்கப்பட்ட உணவுகள் சேர்த்துக்கொள்ளலாம்.
-
அதிக எண்ணெய் கொழுப்பை உண்டாகும்,ஆகையால் எண்ணெய் சேர்த்த உணவுகளை தவிர்க்கலாம்.
- மா உணவுகளை தவிர்த்து,நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளலாம்.
இவ்வாறான முறைகளை பின்பற்றி கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதிக உடற்பருமனை தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.