எலுமிச்சை சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுமா?
பொதுவாக அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் தான் எலுமிச்சை.
இதில் நிறைய மருத்துவ குணங்களும் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் பண்பும் அதிகமாக இருக்கிறது.
ஆனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்பது நிறைய பேருக்கு தெரியாது.
இதில் நிறைந்துள்ள சத்துக்கள் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகின்றது.
அந்தவகையில் எலுமிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் எப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும் என்பது இங்கே பார்ப்போம்.
எலுமிச்சைக்கும் நீரிழிவு நோய்க்கும் என்ன தொடர்பு?
எலுமிச்சை உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
மேலும், எலுமிச்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறந்த வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதிலுள்ள வைட்டமின் சி இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவி புரிகின்றது.
நீரிழிவு நோயாளிகள் எப்படி எடுத்துக் கொள்ளலாம்?
- இரத்த சர்க்கரையை குறைக்க உங்கள் உணவில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டு கொண்டால் நன்மை தரும்.
- வெதுவெதுப்பான நீரில் வெறும் வயிற்றில் சர்க்கரை, தேன் என எதுவும் சேர்க்காமல் எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு சீராக அமையும்.
- தண்ணீரில் எலுமிச்சை பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டுக் கொள்ளவும். இதனை நாள் முழுக்க பருகி வந்தால் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறுவதோடு எந்த நேரத்திலும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
- அரிசி, உருளைக்கிழங்கு, சோளம் போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளில் எலுமிச்சை சாற்றை சேர்ப்பதால் உடலில் ஆரோக்கியமானது சமநிலை அடைகிறது.