டாட்டூ போடுவது புற்றுநோயை ஏற்படுத்துமா?
பொதுவாக இன்றைய காலத்தில் டாட்டூ குத்துவது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.
ஆண்களும், சரி் பெண்களும் சரி இதனை ஒரு பேஷன் கொண்டுள்ளார்.
உண்மையில் டாட்டூ குத்துவது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுகின்றது.
டாட்டூ குத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் மைகளில் எண்ணிடலங்கா ரசாயனங்கள் இருப்பதால் அவை உடலுக்கு பெரும்கேடு விளைவிக்கக்கூடும் என பல ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பாக புற்றுநோய் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது.
உண்மையில் டாட்டு போடுவது புற்றுநோயை ஏற்படுத்துமா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்வோம்.
டாட்டூ போடுவது புற்றுநோயை ஏற்படுத்துமா?
பச்சை குத்திக்கொள்வது புற்றுநோய் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
இருப்பினும் டாட்டூ குத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஊசிகள் வழியாக பலவித தொற்றுநோய்கள் ஏற்படலாம்.
சருமத்தில் ஏற்படும் காசநோய், ஹெச்.ஐ.வி, தொழுநோய், ஹெபடைட்டிஸ் பி போன்ற பல பிரச்னைகள் ஏற்படக்கூடும். எனவே, டாட்டூ குத்தும் ஊசியை ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாகப் பயன்படுத்துகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
செய்ய கூடாதவை
- புதிதாக பச்சை குத்தப்பட்ட சருமத்தில் நீட்டக்கூடிய பயிற்சிகளைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.
- தோல் சிராய்ப்பு அபாயத்தைக் குறைக்க உங்கள் டாட்டூ முற்றிலும் குணமாகும் வரை நீங்கள் சரும உராய்வு ஏற்படும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.
- மிக முக்கியமாக, பச்சை குத்திய பிறகு உடற்பயிற்சி செய்வதற்கு முன் குறைந்தபட்சம் 48 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும்.