பிரித்தானியாவில் இரண்டு டஜனுக்கும் அதிகமான நாய்களை திருடி சென்ற மூன்று இளம்பெண்கள் கைது! வெளியான புகைப்படங்கள்
பிரித்தானியாவில் 26 நாய்களை திருடி சென்று அடைத்து வைத்திருந்த குற்றம் தொடர்பில் மூன்று இளம்பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானியாவின் எப்சோம் நகரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள நாய் கொட்டிலில் 26 நாய்கள் இருப்பதை சோதனைக்காக சென்ற பொலிசார் கண்டுபிடித்தனர். இதோடு 5 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக 20, 23, 30 வயதுகளில் உள்ள உள்ள மூன்று இளம்பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட நாய்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாய்கள் யார் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
பிரித்தானியாவில் கடந்தாண்டு கொரோனா லாக்டவுனில் இருந்து செல்லப்பிராணியாக நாய்களை வளர்க்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.