நாயின் பிறந்தநாளுக்கு 100 கிலோ கேக் வெட்டிய தொழிலதிபர்! 5000 பேருக்கு விருந்து
இந்தியாவில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய வளர்ப்பு நாயின் பிறந்தநாளில் 100 கிலோ கேக் வெட்டியதுடன் 5000 கிராம மக்களுக்கு விருந்தளித்து உபசரித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் மூடலகி தாலுகா துக்காநட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா மர்தி.
பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான சிவப்பா மர்தி தொழிலதிபர் ஆவார், இவர் தன்னுடைய வீட்டில் கிரிஷ் என்ற வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
கிரிஷ் மீது சிவப்பா மர்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர், கிரிஷ்க்கு பிறந்தநாள் வந்துவிட அதை வெகுவிமர்சையாக கொண்டாட முடிவு செய்தார்.
இதற்காக 100 கிலோ கேக் ஒன்றை செய்து, அதை கிரிஷ் வெட்ட ஊர் மக்களே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
மேலும் அந்த நாய்க்கு மாலை அணிவித்து கிராமம் முழுவதும் ஊர்லவமாக அழைத்து சென்றனர்.
அதன்பிறகு நாயின் பிறந்தநாளுக்கு வந்திருந்த கிராமத்தை சேர்ந்த 5 ஆயிரம் பேருக்கு உணவு விருந்து வழங்கினார்.
கிரிஷ்ஷையும், சிவப்பாவையும் கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.