100 வருட பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் நாய் உயிரிழப்பு
100 வருட பழமையான கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த போது, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய நாய் உயிரிழந்துள்ளது.
நாய் உயிரிழப்பு
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஃபிரோசாபாத்தில் சதார் பஜாரில் 100 ஆண்டுகள் பழமையான கட்டடம் ஒன்று இருந்தது.
இந்த கட்டடத்திற்கு சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அதன் நிலை மிகவும் மோசமடைந்தது.
இந்த பஜார் வழியாக மக்கள் அதிகமானோர் நடந்து செல்வார்கள். இந்நிலையில், இந்த கட்டடம் இடிந்து விழுந்து புகை போன்று சூழ்ந்தது.
இந்த சம்பவம் நடைபெற்ற அன்று தெருநாய் ஒன்று தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடியது. அப்போது, கட்டட இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக நாய் உயிரிழந்தது.
தற்போது இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
🚨 फिरोजाबाद: पुरानी इमारत गिरने से मची भगदड़ 🚨
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) March 20, 2025
भरभराकर गिरी जर्जर इमारत, इलाके में अफरा-तफरी। गनीमत रही कि घटना में कोई जनहानि नहीं हुई। पुलिस फोर्स मौके पर पहुंचकर बचाव कार्य में जुटी।
📹 CCTV फुटेज में लोग इमारत से भागते नजर आए
📍 थाना दक्षिण क्षेत्र, अट्टा बाला मोहल्ला… pic.twitter.com/6tOzPu2uI3
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |