லண்டனுக்கு வர வேண்டாம்! மக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
யூரோ 2020 விளையாட்டு போட்டியை பார்க்க மக்கள் பிரித்தானியா தலைநகர் லண்டனுக்கு மக்கள் வர வேண்டாம் என்று பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜூன் 19ம் திகதி மாலை Wembley-யில் நடக்கும் யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
ஆனால், போட்டியை காண டிக்கெட் இல்லாத ரசிகர்கள் லண்டனுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று மூத்த பொலிஸ் அதிகாரி எச்சரித்துள்ளார்.
லண்டன் பெருநகர காவல்துறை துணை உதவி ஆணையர் Laurence Taylor கூறியதாவது, எங்களுடன் ஒத்துழைக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
லண்டனுக்கு வந்த இந்த நிகழ்வை கொண்டாட மக்கள் விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்,
ஆனால் லண்டனில் உள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் டிக்கெட் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகளுடன், பப்கள் மற்றும் மதுக்கடைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களே அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பெரியளவில் கூடுவோர் மீது பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என Laurence Taylor எச்சரித்துள்ளார்.