இயற்கை பேரழிவுக்கான அறிகுறி? தமிழக மீனவர்களின் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்
இயற்கை பேரழிவை குறிப்பதாக கருதப்படும் டூம்ஸ்டே மீன் தமிழக மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது.
டூம்ஸ்டே மீன் அல்லது Oarfish என அழைக்கப்படும் அரிய வகை மீனை காண்பது, இயற்கை பேரழிவிற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
இந்த மீன் ஆனது கடலில் 200 மீட்டர் முதல் 1000 மீட்டர் ஆழத்தில் வசிக்க கூடியது. இதனால் இந்த மீனை காண்பது அரிதான ஒன்றாகும்.
தமிழக கடற்கரையில் டூம்ஸ்டே
மீன் இந்த நிலையில், தமிழக கடற்கரையில் தமிழக மீனவர்களின் வலையில் இந்த மீன் சிக்கியுள்ளது.
30 அடி நீளத்தில், ரிப்பன் போன்ற உடல்தோற்றம் உள்ள இந்த மீனின் உடற்பகுதி வெள்ளி நிறத்தில் அமைந்துள்ளது.
ரெகலேகஸ் கிளெஸ்னே என்ற அறிவியல் பெயரை கொண்ட இந்த மீன், டூம்ஸ்டே மீன் அல்லது பூகம்ப மீன் என அழைக்கப்படுகிறது.
முன்னதாக 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி மற்றும் பூகம்பம் ஏற்படும் முன் இந்த மீன்கள் அடிக்கடி கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஜப்பான் கோட்பாடு பிரபலமடைந்தது.
ஆழ்கடலில் வசிக்கும் இந்த மீன்கள் நில அதிர்வு தொந்தரவுகள், காந்த மாற்றங்கள் அல்லது நீருக்கடியில் வாயு வெளியீடுகளின் உணர்திறன் கொண்டவை.
இதனால் இயற்கை மாற்றம் காரணமாக இந்த மீன்கள் மேற்பரப்புக்கு வருகின்றன என சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மீன்களைப் பார்ப்பதால், இயற்கை பேரழிவு ஏற்படும் என்பதற்கான உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |