பலன் தரும் பப்பாளியில் பக்கவிளைவுகளும் உண்டா? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
diabetes
Asthma
Diarrhea
allergy
By Kishanthini
பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.
இதில் பல அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது. இருப்பினும் இதனை ஒரு சிலர் எடுத்து கொள்வது நல்லதல்ல. ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அந்தவகையில் பப்பாளிப்பழத்தை யாரெல்லாம் எடுக்க கூடாது? என்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.
- பப்பாளி இலைகளில் பப்பேன் எனப்படும் கூறு உள்ளது. நீங்கள் கர்ப்பமாக இருந்தால் உங்கள் குழந்தைக்கு நச்சுத்தன்மையளிக்கும் . இது பிறப்பு குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும்.
- கர்ப்பிணி பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் பப்பாளி விதைகள், வேர்கள் மற்றும் இலைகள் எடுத்துகொள்வது கருவுக்கு தீங்கு விளைவிக்கும். என்பதால் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்
- பழுக்காத பப்பாளி சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். பச்சை பப்பாளி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அல்லது உணர்திறன் இருப்பவர்கள் பப்பாளி எடுத்துகொள்வது சரிபார்க்க வேண்டும்.
- பப்பேன் அல்லது பூக்களிலிருந்து வரும் மகரந்தம் சில ஒவ்வாமைகளுக்கு வழிவகுக்கும். சில எதிர்விளைவுகளில் வீக்கம், தலைச்சுற்றல், தலைவலி, தடிப்புகள் மற்றும் அரிப்பு போன்றவை எடுக்கலாம்.
- பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்ததாக இருக்கும் போது, அதிகமாக எடுத்துகொண்டால் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். பழத்தின் தோலில் லேடக்ஸ் இருப்பதால் அவை வயிற்றை எரிச்சலடையச் செய்து வலி மற்றும் அசெளகரியத்தை ஏற்படுத்தும்.
-
பழத்தில் உள்ள நார்ச்சத்து மலத்துடன் பிணைக்கப்பட்டு வயிற்றுப்போக்கு உண்டாகலாம். இதனால் நீங்கள் நீரிழப்புக்கு உண்டாகவும் வாய்ப்புண்டு.
- உயர் இரத்த அழுத்தத்திற்கான ஏற்கனவே மருந்துகள் எடுத்துகொண்டால் பப்பாளியை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கும். இது ஆபத்தானது.
- நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்கும் நோயாளிகள் அதிகமாக பப்பாளிப்பழத்தை எடுத்துகொள்வது திடீரென்று சர்க்கரை அளவு குறைந்து விடக்கூடும். அதனால் தொடர்ந்து பப்பாளி சாப்பிடுபவர்கள் அவ்வபோது சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது.
- அதிகப்படியான நுகர்வு ஆஸ்துமா, நெரிசல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். ஆஸ்துமா தீவிரமாக கொண்டிருப்பவர்கள் பப்பாளியை அதிகம் சேர்க்காமல் அளவாக சேர்க்க வேண்டும்.
- உடல்நல பிரச்சனைகள் தீவிரமாகாமல் இருக்க அதிகமாக பப்பாளிப்பழத்தை அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
- பப்பாளி அதிகமாக சாப்பிட்டால் உணவுக்குழாயை சேதப்படுத்தக்கூடும்.பப்பாளியை அதிகமாக உட்கொள்வது நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
- பப்பாளி விதைகள் கருக்கலைப்பை உண்டாக்கும். பழுக்காத பப்பாளி கருப்பை சுருக்கத்துக்கு வழிவகுக்கும். எனவே கர்ப்ப காலத்தில் பப்பாளி அதிகம் எடுத்துகொள்வதை தவிர்ப்பது நல்லது.
- பப்பாளி விதை சாறு ஆண்களின் கருவுறுதலையும் குறைக்க செய்யலாம். இது விந்தணுக்களின் இயக்கத்தையும் பாதிக்கும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US