கோவிஷீல்டு 2-வது டோஸுக்கான கால இடைவெளியில் மாற்றம்
விஞ்ஞான தரவுகளின் அடிப்படையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து, சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு டோஸ்களுக்குமான இடைவெளியை 12 வாரம் முதல் 16 வாரங்கள் வரை நீட்டிக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இரண்டாவது டோஸ் 12 முதல் 16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால் கூடுதல் பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசிக்கான நெறிமுறை மாற்றப்பட்டது. ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசியின் இடைவெளியை குறைப்பது பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
இதனால் கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிடையே, 2-வது டோஸ் செலுத்துவது குறித்த குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "விஞ்ஞான தரவுகளின் அடிப்படையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தரவுகளை மதிப்பீடு செய்ய, இந்தியா வலுவான தொழில்நுட்பத்தை கையாள்கிறது. இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவது துரதிருஷ்டவசமானது" என்று தெரிவித்துள்ளார்.
Decision to increase the gap between administering 2 doses of #COVISHIELD has been taken in a transparent manner based on scientific data.
— Dr Harsh Vardhan (@drharshvardhan) June 16, 2021
India has a robust mechanism to evaluate data.
It's unfortunate that such an important issue is being politicised!https://t.co/YFYMLHi21L