தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் அபாயம் குறித்து வெளியான முக்கிய தகவல்
இரண்டு டோஸ் தடுப்பூசி கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை பாதியாக குறைக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 98,000 க்கும் மேற்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்டு இம்பீரியல் கல்லூரியின் ரியாக்ட் -1 நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு உள்ள ஒருவருடன் இரட்டை டோஸ் தடுப்பூசி போட்ட நபர் தொடர்பில் இருந்தால், 26 பேரில் ஒருவருக்கு மட்டுமே வைரஸ் தொற்றும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடாதவர்களாக இருந்தால், 13 பேரில் ஒருவருக்கு வைரஸ் தொற்றும்.
அதேசமயம், இரண்டு டோஸ் போட்ட நபர்கள் தொற்றை மற்றவர்களுக்கு பரப்புவதற்கான வாய்ப்பு குறைவு, மேலும் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் பாதிப்பு லேசாக தான் இருக்கும் என இம்பீரியல் ஆய்வு பரிந்துரைக்கிறது.
தடுப்பூசி போடாத நபர்களை விட தடுப்பூசி போட்ட நபர்களில் கொரோனா வைரஸைக் கண்டறிய அதிக சுற்று பிசிஆர் சோதனை தேவை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.