பிரித்தானியாவிற்குள் நுழைந்த மீண்டும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ்! உறுதி செய்த சுகாதார அதிகாரிகள்
இந்தியாவில் இரண்டு வெவ்வேறு வகையில் பரவக் கூடிய கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது உலகின் ஒவ்வொரு நாடுகளிலும் பரவி, அது வெவ்வேறு விதமாக பரவி வருகிறது.
இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உலகநாடுகள் கடும் போராட்டத்தை சந்தித்து வருகின்றன. குறிப்பாக தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் தன்மை கொண்டது.
இதே போன்று பிரேசில் போன்ற ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு பரவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இரண்டு வெவ்வேறு வகையில் பரவக் கூடிய, அதாவது இரண்டு பிறழ்வுகளைக் கொண்ட கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் இதுவரை 77 வழக்குகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 73 மற்றும் ஸ்காட்லாந்தில் நான்கு என கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வகை கொரோனா வைரஸ் (E484Q மற்றும் L452R) கொண்டுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் பிரித்தானியாவிற்குள் எப்படி நுழைந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, இப்போது இங்கிலாந்தில் உள்ள ஆறு பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே தடுப்பூசியால் பெறப்பட்ட ஆண்டிபாடிகளை எதிர்க்கும் சக்தி கொண்டது என்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.
இந்தியா பயண சிவப்பு நாடுகளின் பட்டியலில் இல்லை. அப்படி அது இருந்திருந்தால், இந்தியாவில் இருந்து பிரித்தானியாவிற்கு வரும் எவரும் 10 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.