வாக்னர் கூலிப்படைத்தலைவரின் மரணம் மீதான சந்தேகம் நியாயமானதே... ஜேர்மனி
வாக்னர் கூலிப்படைத்தலைவரின் மரணத்தின் பின்னணியில் கிரெம்ளின் இருப்பதாக உருவாகியுள்ள சந்தேகம் நியாயமானதே என ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock கூறியுள்ளார்.
இப்படித்தான் பலருக்கும் நிகழ்ந்துள்ளது
ஒரு காலத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து, பின் அவருக்கு எதிராக மாறிய வாக்னர் கூலிப்படைத் தலைவர் Yevgeny Prigozhin பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில், அவர் உட்பட அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பலரும் Prigozhinஇன் மரணத்தின் பின்னணியில் புடின் இருக்கக்கூடும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது, வாக்னர் கூலிப்படைத்தலைவரின் மரணத்தின் பின்னணியில் கிரெம்ளின் இருப்பதாக உருவாகியுள்ள சந்தேகம் நியாயமானதே என ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbockம் கூறியுள்ளார்.
ரஷ்யாவைப் பொருத்தவரையில், பலருக்கும் இதேபோல நடந்துள்ளது, உயிரிழந்தது எப்படி என விவரிக்க முடியாத மரணங்கள் பல இதேபோல ரஷ்யாவில் நடந்துள்ளன என்கிறார் அவர்.
இது விபத்தா?
புடினுக்கு நெருக்கமாக இருந்த ஒருவர், இரண்டு மாதங்களுக்கு முன் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் இறங்கியவர், திடீரென வானத்திலிருந்து விழுந்து உயிரிழக்கிறார் என்றால், அதன் பின்னணியில் கிரெம்ளின் இருப்பதாக உலகம் கருதுவது அசாதாரண விடயமா என கேள்வி எழுப்பியுள்ளார் Annalena.
புடினுடைய ரஷ்யாவில் இப்படி நடப்பது நம் எல்லோருக்கும் தெரியும். மரணங்கள், சந்தேகத்துக்குரிய தற்கொலைகள், ஜன்னலிலிருந்து விழுந்து உயிரிழப்பது, இப்படி நடப்பவை எதுவுமே எப்படி நடந்தன என்பதற்கு விளக்கமே கிடைக்காது, இது வன்முறையின் மீது கட்டியெழுப்பப்பட்ட சர்வாதிகாரத்தனமான ஒரு ஆட்சியமைப்பைத்தான் காட்டுகிறது என்று கூறியுள்ளார் Annalena.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |