பிரித்தானிய மகாராணியாரின் கணவர் அடக்கம் செய்யப்படும் முன்.. பிரதமர் இல்லத்தில் நடந்த பார்ட்டி
கணவனை இழந்த பிரித்தானிய மகாராணியார் பொதுமுடக்க விதிகளை மீறக்கூடாது என்பதற்காக அருகில் யாருமின்றி தனிமையில் துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருந்த நேரத்தில், பிரதமர் இல்லத்தில் பார்ட்டி ஒன்று நடந்துகொண்டிருந்ததாக அதிரவைக்கும் குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்தினம், பிரதமர் இல்லத்தில் மதுபான பார்ட்டி ஒன்று நடந்துள்ளது.
அரசின் ஆலோசகர்களும், அரசு ஊழியர்களும் எக்கச்சக்கமாக மது அருந்திவிட்டு பிரதமர் இல்ல அடித்தளத்திலும் தோட்டத்திலும் நடனமாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
2021 ஏப்ரல் 26 அன்று, பிரதமர் இல்லத்தின் இரு பகுதிகளில் இரண்டு பார்ட்டிகள் நடந்ததாகவும், சுமார் 30 பேர் பார்ட்டிகளில் பங்கேற்றதாகவும், பின்னர் அனைவரும் தோட்டத்தில் கூடியதாகவும் நடந்தவற்றைக் கண்ணால் கண்டவர்கள் சாட்சியமளித்துள்ளார்கள்.
பார்ட்டியில் மதுபானம் பெருக்கெடுத்து ஓடியதால், அதாவது எகக்சக்கமான மது அருந்திக்கொண்டு நடனமாடியதால் பிரதமர் இல்லத்தின் அடித்தளத்தில் போடப்பட்டிருந்த கார்ப்பெட்டில் மது கொட்டி அது நனைந்ததால், நள்ளிரவில் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் அந்த அறையை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
அன்றைய தினம், பிரித்தானியாவே இளவரசர் பிலிப்பின் மரணத்துக்காக துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருந்தது.
அப்போது நாட்டின் இரண்டாம் கட்ட பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அமுலில் இருந்ததால், பொதுமக்கள் கூடி அஞ்சலி செலுத்த முடியாத ஒரு நிலை இருந்தது.
அடுத்த நாள், பிரித்தானிய மகாராணியாரும் கட்டுப்பாடுகள் காரணமாக விண்ட்சர் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் கருப்பு நிற உடையணிந்து முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்து தனிமையில் அமர்ந்து துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருந்தார்.
ஆனால், முந்தைய தினம் பிரதமர் இல்லத்தில் விதிகளை மீறி பார்ட்டி நடந்திருக்கிறது. போரிஸ் ஜான்சன் பதவியேற்றதிலிருந்தே அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.
அவரது மனைவி பொதுமக்கள் பணத்தில் வீட்டை அலங்கரித்ததில் துவங்கி தற்போது மகாராணியாரே துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருந்தபோது அவர் வீட்டில் பார்ட்டி நடந்தது வரை எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால் அவரது பிரதமர் பதவிக்கு பிரச்சினை ஏற்படலாம் என கருதப்படுகிறது.