ஜேர்மனியில் தொழிற்சங்க பேரணியின் போது அதிர்ச்சி சம்பவம்... பலர் கவலைக்கிடம்

Asylum Seeker Afghanistan
By Arbin Feb 13, 2025 04:23 PM GMT
Report

ஜேர்மனியின் மியூனிக் நகரில் ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் ஓட்டிச் சென்ற கார், கூட்டத்திற்குள் புகுந்த சம்பவத்தில் சுமார் 28 பேர்கள் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்

இது திட்டமிட்ட தாக்குதல் என மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் 24 வயது ஆப்கானிஸ்தான் புகலிடக்கோரிக்கையாளர் என்றே தெரிய வந்துள்ளது.

ஜேர்மனியில் தொழிற்சங்க பேரணியின் போது அதிர்ச்சி சம்பவம்... பலர் கவலைக்கிடம் | Dozens Hurt Car Ramming Attack In Munich

பொலிசார் தெரிவிக்கையில், தொழிற்சங்க பேரணி நடந்துகொண்டிருக்கும் போது வெள்ளை நிற கார் ஒன்று பொலிசாரின் வாகனத்தை நெருங்கியதாகவும், சட்டென்று வேகமெடுத்த அந்த வாகனம் பேரணியில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட நபர் காயமடைந்தாரா என்பது தொடர்பில் தகவல் இல்லை. இந்த நிலையில் துரிதமாக செயல்பட்ட பொலிசார், அந்த நபரை கைது செய்துள்ளனர்.

இப்படியாக நுழையும் புலம்பெயர்ந்தோர்... குடியுரிமை மறுக்கப்படும்: பிரித்தானியா உறுதி

இப்படியாக நுழையும் புலம்பெயர்ந்தோர்... குடியுரிமை மறுக்கப்படும்: பிரித்தானியா உறுதி

இது அநேகமாக ஒரு தாக்குதலாக இருக்கலாம் என்றே பவேரியா மாகாண முதல்வர் மார்கஸ் சோடர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபர் போதைப்பொருள் மற்றும் கடைத் திருட்டு குற்றங்களுக்காக பொலிசாருக்குத் தெரிந்திருந்தவர் என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஜேர்மனியில் தொழிற்சங்க பேரணியின் போது அதிர்ச்சி சம்பவம்... பலர் கவலைக்கிடம் | Dozens Hurt Car Ramming Attack In Munich

ஆபத்தான நிலையில்

வெளியான தகவலின் அடிப்படையில், 2016ல் ஜேர்மனியில் நுழைந்த அந்த நபரின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது என்றும், ஆனால் அவரை வெளியேற்றாமல் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜேர்மனியில் தொழிற்சங்க பேரணியின் போது அதிர்ச்சி சம்பவம்... பலர் கவலைக்கிடம் | Dozens Hurt Car Ramming Attack In Munich

இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் அவர் நாடுகடத்தப்பட வேண்டும் என சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை 28 பேர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US