தீபக் சஹாரிடம் இதை போய் சொல்... கடைசி கட்டத்தில் ராகுல் சாகரை அனுப்பிய டிராவிட்: அப்படி என்ன சொல்லிவிட்டார் தெரியுமா?
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, டிராவிட் கடைசி கட்டத்தில் தீபக் சஹாருக்கு என்ன ஆலோசனை வழங்கினார் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
தோற்க வேண்டிய இந்திய அணியை தீபக் சஹார் எட்டாவது வீரராக வந்து சிறப்பாக விளையாடி 82 பந்தில் 69 ஓட்டங்கள் குவித்து வெற்றியை தேடித் தந்தார். அவருக்கு இப்போது வரை வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியின் போது தீபக் சஹார் பேட்டிங்க் செய்து கொண்டிருந்த போது, கடைசி கட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, அப்போது உடனடியே வீரர்கள் இருக்கும் அறைக்கு வந்த பயிற்சியாளர் டிராவிட, அங்கிருந்த ராகுல் சஹாரிடம் ஏதோ பேசி அனுப்பினார்.
அதன் பின்னரே தீபக் சஹார் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடித் தந்தார். ஆனால் டிராவிட் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. இதையடுத்து தற்போது அந்த ரகசியம் தெரியவந்துள்ளது.
வெளியில் வந்த டிராவிட், ராகுல் சஹாரிடம், தீபக் சாஹர் எல்லா பந்துகளையும் ஆட வேண்டும்.
இந்திய அணியை வெற்றிபெற செய்ய இது அவருக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு. மேலும் நிச்சயம் அவரால் வெற்றிக்கு தேவையான ஓட்டங்களை குவிக்க முடியும். எனவே அதிக அளவு பந்துகளை அவரை எதிர் கொள்ளச் செய்யுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.