இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா?
சுவைமிக்க பானமான இளநீர் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கொடுக்கிறது எனபது பலரும் அறிந்ததே. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்றவை அதிகமாக உள்ளது. முக்கியமாக உடல் சூட்டிற்கு இளநீர் அதிமருந்தாக செயல்படுகிறது.
நாணயத்துக்கு இரு பக்கங்கள் உள்ளது போல, இவ்வளவு நன்மைகளை கொடுக்கும் இளநீர் தீமைகளையும் கொடுக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
இளநீர் அதிகளவில் உட்கொள்வது நம்மை கழிப்பறையை நோக்கி அதிக முறை ஓட வைக்கும். அதாவது அதிகம் சிறுநீர் கழிக்க வைக்கும், இளநீரில் உள்ள அதிக அளவிலான பொட்டாசியம் இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. அதன்படி அதிகபடியான நீரை வெளியேற்ற சிறுநீரகங்கள் உழைப்பின் தேவை அதிகமாக உள்ளது, இது தொடர்ந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என நினைத்து மற்ற பழச்சாறுகளுக்கு மாற்றாக இதை பலரும் குடிக்கின்றனர். ஆனால் ஒரு கப் தேங்காய் நீரில் 6.26 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் இளநீர் தினமும் குடிக்க கூடாது.
தேங்காய் தண்ணீர் உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். அதிகப்படியான தேங்காய் நீரைக் குடிப்பது உங்கள் இரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கும். குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய் தண்ணீர் அருந்துவதைக் குறைக்க வேண்டும்.
அமெரிக்க விவசாயத் துறையின் கூற்றுப்படி, ஒரு கப் புதிய தேங்காய் நீரில் 252 மில்லிகிராம் சோடியம் உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்காது, ஆனால் உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.
சிலருக்கு சில உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். உணவு ஒவ்வாமைக்கு ஆளாகும், அதன்படி சிலருக்கு இளநீர் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
தேங்காயை உடைத்தவுடம் அதன் தண்ணீரை குடித்து விட வேண்டும். அதை குடிக்க நீண்ட நேரம் ஆக்கக்கூடாது. ஏனெனில் அதை செய்யும் பட்சத்தில் இளநீரில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.