பிரதான சாலையில் கண்ட காட்சி... மொபைலில் படம் பிடித்த 50 சாரதிகள் மீது வழக்கு
பிரித்தானியாவில் M6 பிரதான சாலையில் நடந்த கோர விபத்தை மொபைலில் பதிவு செய்த சாரதிகள் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மூன்று லொறிகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான குறித்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். ஜூலை 8ம் திகதி நடந்த இந்த கோர விபத்தால் M6 பிரதான சாலையின் தென்பகுதி 17 மணி நேரம் மூடப்பட்டது.
இதில் 48 சாரதிகள் குறித்த சம்பவத்தை படம் எடுக்கும் நோக்கில் தங்கள் வாகனங்களின் வேகத்தை குறைத்துக் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அடையாளம் காணப்பட்டுள்ள சாரதிகளை பொலிசார் எச்சரித்துள்ளதுடன், அவர்கள் மீது வழக்குப் பதிந்ததற்கான கடிதம் அனுப்பி வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.