பவுண்டரில் லைனில் வியக்க வைக்கும் கேட்ச் பிடித்து அசத்திய டு பிளசிஸ்... மிரண்டு போன கொல்கத்தா அணி! வைரலாகும் வீடியோ
2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை வீரர் டு பிளசிஸ் பவுண்டரி லைனில் அசத்தலான கேட்ச் பிடித்து அனைவரையும் மிரள வைத்தார்.
செப்டம்பர் 26 அபு தாபியில் நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் தொடரின் 38வது போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள தோனி தலைமையிலான சென்னை அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதல் பேட்டிங் செய்து வருகிறது. ஆட்டத்தின் போது 9வது ஓவரை சென்னை நட்சத்திர பந்து வீச்சாள் Hazlewood வீசனார்.
பேட்டிங் செய்த இயான் மோர்கன் முதல் பந்தையே பவுண்டரியை நோக்கி பறக்கவிட்டார்.
பவுண்டரியில் பீல்டிங் செய்துக்கொண்டிருந்த டு பிளசிஸ், பந்தை எகிறி கேட்ச் பிடித்தார்.
ஆனால், தான் பவுண்டரி லைனை நெருங்குவதை உணர்ந்த டு பிளசிஸ், உடனே கேட்ச் பிடித்த பந்தை மேலே வீசி, ஒரு காலை பவுண்டரி லைனை தாண்டி வைத்து பேலன்ஸ் செய்துவிட் பின் உடனே பவுண்டரி லைனுக்கு உள்ளே வந்து மேலே வீசிய பந்தை லவகமாக மீண்டும் கேட்ச் பிடித்து அசத்தினார்.
இதைகண்டு இயான் மோர்கன் உட்பட எதிரணியினரை மிரண்டு போயினர்.
Brilliant catch by Faf.
— Ibrahim (@Ibrahim_sevN) September 26, 2021
Morgan out#CSKvsKKR #CSK #KKR #IPL2021 pic.twitter.com/NsXzo8g7mf
பவுண்டரி லைனில் மிரள வைக்கும் கேட்ச் பிடித்த டு பிளசிஸின் வியக்க வைக்கும் திறமையை பலர் பாராட்டி வருகின்றனர்.