துபாய் லொட்டரி குலுக்கலில் 50 கோடி ரூபாய் பரிசு வென்ற இந்தியர்!
துபாயில் நடந்த லொட்டரி குலுக்கலில் கேரளாவைச் சேர்ந்த் நபர் 50 கோடி ரூபாய் பரிசை வென்றுள்ளார்.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் துபாயில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் புத்தாண்டு காரணமாக, துபாயில் விற்பனையான மெகா லாட்டரி பரிசு சீட்டை வாங்கிய ஹரிதாஸுக்கு முதல்பரிசாக 50 கோடி ரூபாய் மதிப்பில் பரிசு விழுந்துள்ளது.
இது குறித்து ஹரிதாஸ் கூறுகையில், இதனை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இதனை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார்.
ஹரிதாஸைத் தொடர்ந்து இரண்டாவது பரிசான 4 கோடி ரூபாயை அஷ்வின் அரவிந்தாக்ஷன் என்பவரும், மூன்றாவது பரிசான 20 லட்சத்தை தீபக் ராமசந்த் பாட்டியா என்பவரும் வென்றுள்ளனர்.