CSK அணியின் நட்சத்திர வீரரை அடுத்தாண்டு ஏலத்தில் தட்டி தூக்க காத்திருக்கும் 3 அணிகள்! சென்னை ரசிகர்கள் ஷாக்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரை அடுத்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் தட்டி தூக்க மூன்று அணிகள் காத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ பல இக்கட்டான நேரத்திலும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்,
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டான இவரை 2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணி விடுவித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனென்றால் சென்னையில் ஏற்கனவே பல சிறந்த வீரர்கள் இருப்பதால் இவரை சென்னை அணி தக்க வைத்துக் கொள்ளாது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நட்சத்திர ஆல்ரவுண்டர் பிராவோவை 2022 ஐபிஎல் தொடரில் மூன்று அணிகள் தனது அணியில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டு வருகிறது.
அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பிராவோவை தங்கள் அணிக்குள் கொண்டு வர முயற்சியை எடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
பிராவோ எந்த அணிக்காக ஏலத்தில் எடுக்கப்படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சென்னை அணிக்காக பிராவோ இனி விளையாடாமல் போகலாம் என்ற தகவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.