தினமும் ஒரு கைப்பிடியளவு புதினா சாப்பிடுங்க.. இந்த பிரச்சினை எல்லாம் உங்களை விட்டு போய்விடும்
புதினா ஒரு அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த ஒரு கீரையாகும். புதினாவானது பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்களால் உணவு பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன
புதினாவானது ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரையாகும்.
இதனை தினமும் ஒரு கைப்பிடி சாப்பிட்டு வந்தால் இன்னும் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. அந்தவகையில் தற்போது இதனை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- வயிறு கோளாறுகளை குணப்படுத்துகிறது, மேலும் வீக்கம், வாயு பிரச்சனை மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளையும் இது சரி செய்கிறது.
- புதினா பித்த சுரப்பை உடலில் அதிகரிக்கிறது, இதன் மூலமாக பித்த ஓட்டத்தை இது அதிகரிக்கிறது. மேலும் செரிமானத்தை இது விரைவுப்படுத்துகிறது.
- வாய் துர்நாற்றம் என்பது பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும். அவர்கள் தினமும் புதினாவை வாயில் போட்டு மெல்லலாம், ஏனெனில் வாய் துர்நாற்றத்தை போக்கும் பண்பை புதினா கொண்டுள்ளது.
-
மார்பகத்தில் புண், விரிசல் போன்ற பிரச்சனைகளால் அவர்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது, இந்த வலியை குறைக்க புதினா உதவுகிறது.
- புதினாவில் இருக்கும் மெந்தோல் நாசியில் ஏற்படும் நெரிசலை சரி செய்ய உதவுகிறது. இதனால் நாள்பட்ட இருமலையும் அதனால் ஏற்படும் எரிச்சலையும் சரி செய்ய இது உதவுகிறது . எனவே சளி பிரச்சனை உள்ளவர்கள் புதினா சாறு அல்லது புதினா தேநீர் அருந்தலாம்.
- தொண்டை புண்ணை சரி செய்ய புதினாவை தேநீராக செய்து குடித்து வரலாம். உடலில் காய்ச்சல் ஏற்படும்போது காய்ச்சலை குறைப்பதற்கு புதினா உதவுகிறது.
- உடலில் கொழுப்பு சேராததால் உடல் பருமன் கொண்டவர்கள் உடல் எடையை இழக்க புதினா உதவுகிறது.
- சருமத்திற்கும் புதினா நன்மை பயக்கிறது. சருமத்தில் ஏற்படும் தொற்று மற்றும் அரிப்புகளை சரிசெய்ய இது உதவுகிறது, மேலும் முகப்பரு உண்டாவதற்கான அறிகுறிகளை இது நீக்குகிறது.