உடல் எடையை சட்டென குறைக்க வேண்டுமா? இந்த காயை சாப்பிடுங்கள்
உடல் எடைக்கு என்னதான் பலபேர் பல விதமான உடற்பயிற்சிகளை செய்தாலும் அன்றாடம் நீங்கள் உண்ணும் உணவில் கவனமாக இல்லாவிடில் கடைசிவரை உங்கள் எடையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதே உண்மை.
நாம் 3 வேளைகள் உணவு உட்கொண்டாலும் கூட இடையில் எடுத்துக்கொள்ளும் சிற்றுண்டிகளானது உடலில் தேவையற்ற கொழுப்பை உண்டுபண்ண கூடியவை.
ஆகவே நாம் உட்கொள்ளும் 3 வேளை உணவிலேயே நம் உடலுக்கு தேவையான சக்தி கிடைத்துவிட்டால் சிற்றுண்டிகள் உண்பதற்கான எண்ணம் தோன்றாது.
அந்த வகையில் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும் காய்கறி தான் சௌ சௌ.
எவ்வாறு இதனை உணவுக்கு பயன்படுத்தலாம்?
இதனை தண்ணீரில் வேகவைத்து உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து சூப் போல காலை உணவிற்கு முன் அல்லது பின் உண்ணலாம்.
இவ்வாறு உண்பதால் சீக்கிரமே வயிறு நிறைந்த ஒரு உணர்வு உண்டாகி வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பும் இலகுவில் கரைகிறது.
சௌ சௌலுள்ள சத்துக்கள்
சௌ சௌ வைட்டமின் சி, ஃபோலேட் ஆகியவற்றில் நிறைந்துள்ளது.
குறைந்த கலோரி மற்றும் குறைந்த அளவிலான சர்க்கரையை கொண்டுள்ளது.
பல்வேறு உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு முக்கியமான தாவர கலவைகள், ஆன்டிஆக்ஸிடன்ட்களை ஏராளமான அளவில் வழங்குகிறது.
விட்டமின் B9 ஐ கொண்டுள்ளது.
* இது இரத்த சோகையை சரியாக்கும் என ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு இதில் காணப்படும் போலேட் இரத்த சிவப்பணுக்களின் அளவைினை கூட்டி இரத்த சோகையை இல்லாது செய்கிறது.
* இதிலுள்ள நார்ச்சத்து வயிறு நிறைந்த ஒரு உணர்வினை கொடுக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் உண்ணும் உணவுகளில் இது மிகவும் முக்கியமாக சேர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இது இரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவினை சரியான அளவில் பராமரிக்க உதவுகிறது.
* இதய நோயிற்கான அறிகுறிகளை குறைக்கும் சக்தி சௌ சௌ காயில் உள்ளது.
* இதிலுள்ள விட்டமின் B9 ஆனது ஹோமோசிஸ்டின் எனப்படும் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது இதய நோய் பிரச்சினைகள் ஏற்படும்.
* இதில் காணப்படும் பொட்டாசியம் உடலிலுள்ள சோடியத்தின் அளவினை கட்டுப்படுத்தி உயர் இரத்த அழுத்த பிரச்சினை வராமல் தடுக்கும்.