மருத்துவ பலன்கள் நிறைந்த நெல்லிக்காய்! எப்படி சாப்பிடுவது நல்லது?
பொதுவாக நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்ட ஒரு அற்புத கனியாகும்.
இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.
சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.
அதிலும் இந்த நெல்லிக்காயை வெறுமனே சாப்பிடுவது மட்டுமல்லாமல், ஊறுகாய், உலர்ந்த பொடி, இனிப்பு நெல்லி, முரப்பா போன்ற பலவிதங்களில் எடுத்துக்கொள்ளலாம்.
அந்தவகையில் நெல்லிக்காயை எப்படி எடுத்து கொள்ளலாம் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கே பார்ப்போம்.
- ஒரு டீஸ்பூன் நெல்லிப்பொடியை ஒடு டீஸ்பூன் தேன் அல்லது சுடுதண்ணீரில் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
- 20மி.லி நெல்லிஜூஸை சுடுதண்ணீரில் கலந்து வெறும்வயிற்றில் குடிக்கலாம்.
- லேகியத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள் நெல்லிக்காய். இதை சுடுதண்ணீரில் கலந்து காலையில் வெறும்வயிற்றில் குடிக்கலாம் அல்லது உணவுக்குப்பிறகு 2 மணிநேரம் கழித்து குடிக்கலாம்.
- சுத்தமான நெல்லிக்காயை முரப்பா அல்லது ஊறுகாயாக செய்து தினசரி உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- புளி நெல்லிக்காயை தினசரி 1 அல்லது 2 நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம்.
- நெல்லிக்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் காயவைத்து, தினசரி எடுத்துக்கொள்ளலாம்.
நன்மைகள்
-
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
- முடி உதிர்வு, செரிமானம், நீரிழிவு
- தைராய்டு பிரச்சினை
- கண்பார்வை தெளிவின்மை போன்ற அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது.