பெண்களே வெள்ளைப்படுதல் பிரச்சனை அதிகமாக இருக்கா ? கவலை விடுங்க.. இதோ அற்புத தீர்வு!
பொதுவாக பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது சாதாரணமாக நிகழக்கூடியது என்றாலும் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது அதை கவனத்தில் கொள்வது அவசியம் இல்லையெனில் அவை தொற்றை உண்டாக்கும். இதனால் வெஜினாவில் தொற்று உண்டாகும்.
எனவே இவற்றை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது நல்லது. இதற்கு நெல்லிக்காய் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
இதனை சரியான முறையில் எடுத்து கொண்டால் இப்பிரச்சினையிலிருந்து இருந்து விடுபடலாம். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
- நெல்லிக்காய் விதையின் பொடியை கடையிலும் வாங்கலாம் அல்லது வீட்டிலும் செய்யலாம். நீங்கள் நெல்லிக்காயின் விதைகளை காய வைக்காமலே அவற்றை உடைத்து மிக்ஸியின் போட்டு கெட்டியான பேஸ்டாக அரைத்துக்கொள்ளுங்கள்.
- பின் அதில் 2 ஸ்பூன் தேன் கலந்து இறுக்கமான டப்பாவில் மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
- பின் தினமும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்துவாருங்கள். இவ்வாறு செய்ய அதிகப்படியாக வெளியேறும் வெள்ளைப்படுதலை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
முக்கிய குறிப்பு
அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் அம்மாக்கள் , மருந்து மாத்திரைகள் அதிகம் சாப்பிடுவோர், மருத்துவரின் ஆலோசனை பெற்றபின் சாப்பிடுவது நல்லது.