நின்று கொண்டே உணவு சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தெரியுமா?
தற்போதைய காலகட்டத்தில் நின்று கொண்டே உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என கூறினால் அது மிகையாகாது!
பல உணவங்களில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கமும் பரவ தொடங்கிவிட்டது. இது மட்டுமின்றி இப்பொது திருமணங்களிலும் பஃபே(buffet) விருந்து என்று நின்று கொண்டு சாப்பிடும் பழக்கம் உண்டாகிவிட்டது.
நின்று கொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று பார்ப்போம்.
செரிமான பிரச்சினை
மருத்துவர்களின் கூற்றுப்படி நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது.
இது குடலின் அழுத்தத்தை உண்டாக்கி செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும்.
அதிகம் சாப்பிட தூண்டும்
நின்று கொண்டு சாப்பிடும்போது உணவு வேகமாக கீழே சென்று விடுவதால் நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்களா என்று உங்களுக்கே தெரியாது.
இதன் விளைவாக நீங்கள் அதிகமாக சாப்பிட நேரிடும். அதனால் தான் எப்பொழுதும் அமர்ந்து நிதானமாக சாப்பிடுவதே ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது.
இது நிறைவான உணர்வை தருவதோடு கலோரிகளையும் எளிதாக எரிக்கும்.
உட்கார்ந்து சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் என்ன?
தரையில் உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு செரிமானம் சீராக இருக்கும், அதேசமயம் அதிகமாக சாப்பிடுதல், தவறான நேரங்களில் பசி எடுத்தல் போன்ற பிரச்சினைகள் வராது.
அதே நேரம் இந்த முறையிலான உணவு உணணும் பழக்கத்தினால் சிலர் மன உழைச்சலுக்கு ஆளாகின்றனர். நாம் “பதட்டம்” என்ற வார்த்தையை கேட்கும்போது, அது ஒரு சின்ன உடல் நலிவாக தெரிகிறது, ஆனால் அவற்றால் வருத்தப்படுபவர்களுக்கு, அது ஒரு பெரிய பிரச்சனை.
வயதானவர்களின் சதவிகிதத்தை ஒப்பிட்டு நோக்கினால், அதிகமாக முப்பத்தைந்து வயதிற்கு குறைவான மக்கள் பதட்ட கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.