11 வருடம் கழித்து மீண்டும் வரும் சாம்பியன்ஸ் லீக் T20? இதிலும் CSK MI ஆதிக்கம்
நிறுத்தப்பட்ட சாம்பியன்ஸ் லீக் T20 தொடரை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2008 ஆம் ஆண்டு பிசிசிஐ சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட T20 லீக்கான IPL தொடருக்கு உலகளவில் கிடைத்த பெரும் வரவேற்பையடுத்து, தற்போது 18வது ஐபிஎல் தொடர் வரை நடைபெற்றுள்ளது.
ஐபிஎல் வெற்றிக்கு பின்னர், தென்ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் கிரிக்கெட் வாரியங்களும் T20 லீக் போட்டிகளை நடத்த தொடங்கின.
மீண்டும் CLT20?
ஆனால், IPL தவிர்த்த பிற நாடுகளின் லீக் போட்டிகளில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட பிசிசிஐ தடைவிதித்துள்ளது. அதேவேளையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடி கொள்ளலாம்.
இதே போல் IPL இறுதிப்போட்டி அணிகள் மற்றும் பிற நாடுகளின் T20 லீக் போட்டிகளின் இறுதிப்போட்டி அணிகள் ஒன்றாக விளையாடும் வகையில், சாம்பியன்ஸ் லீக் T20 தொடரை தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்களுடன் இனைந்து BCCI அறிமுகப்படுத்தியது.
2008 முதல் 2014 வரை நடைபெற்ற இந்த தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 2 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தின. நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், CLT20 தொடருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், அந்த தொடர் 2014 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
தற்போது CLT20 தொடரை உலக கிளப் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பேசிய ECB) நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட், "CLT20 தொடர் சரியான நேரத்திற்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டதால் வணிகரீதியாக அது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் அது மிகவும் நல்ல தொடர்.
தற்போது CLT20 தொடரின் நீட்சியாக உலக கிளப் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ உடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆண்கள் மற்றும் பெண்கள் என 2 வடிவங்களில் உலக கிளப் சாம்பியன்ஷிப் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |