முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவின் ரூ.557 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை
பண மோசடி வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவின் ரூ.557 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சொத்துக்கள் முடக்கம்
பண மோசடி வழக்கில் ஹரியானா முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தரம் சிங் சோக்கர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இவரது ரூ.557 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இதன் மூலம் முடக்கப்பட்டுள்ள ஒட்டு மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.638 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த சொத்துக்களில் சோக்கர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு சொந்தமான சொத்துகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக குர்கானில் உள்ள 35 ஏக்கர் நிலம், பல்வேறு செக்டார்களில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தரம் சிங் சோக்கரின் நிறுவனமானது வீடுகள் கட்டித் தருவதாக கூறி 3,700 பேரிடமிருந்து ரூ.616 கோடியை வசூலித்துவிட்டு வீடு கட்டி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது.
மேலும், போலி ஆவணங்களை காட்டி நிதி திரப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சோக்கர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |