கீரையை அதிகமாக சாப்பிட்டால் பக்கவிளைவுகள் வருமா?
Allergy
Diarrhea
Stomach Pain
By Kishanthini
பொதுவாக நம்மில் பலர் கீரையை அன்றாட உணவில் சேர்த்து வழக்கமாகும். இது அவ்வளவு ஊட்டச்சத்து நன்மைகள் நிறைந்துள்ளது.
கீரையால் நமக்கு கிடைக்கும் நன்மை அதிகம்தான் என்றாலும் அதை அதிகமாகவும் உட்கொள்ளக் கூடாது.
ஏனெனில் தொடர்ச்சியாக மூன்று வேளைக்கு அதிக கீரை உட்கொள்வது, இரண்டு மூன்று நாளைக்கு மூன்று வேளையும் கீரை உட்கொண்டால் அவை நமக்கு பக்க விளைவுகளை உண்டாக்கலாம்.
எனவே இவற்றை அளவோடு உட்கொள்வது நல்லது. அந்தவகையில் கீரையை அதிகம் உட்கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- தாவர வகைகளில் இயற்கையாக இருக்கக் கூடியது ஆக்ஸாலிக் அமிலம். இதன் அளவு உடலில் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது மற்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும். குறிப்பாக ஸிங்க், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றுடன் ஆக்ஸாலிக் அமிலமும் பிணைக்கப்பட்டிருப்பதால் தாதுப் பற்றாக்குறையை உண்டாக்கும்.
- அதிக அளவில் கீரை உட்கொள்வது ஒவ்வாமையை வெளிப்படுத்தலாம். இது தீவிரமாக இல்லாமல் தற்காலிகமாக இருக்கலாம். இதற்கு கீரையில் உள்ள ஹிஸ்டமைன் அளவு அதிகரிப்பதே காரணம்.
- அதிக அளவில் கீரையை ஒரே நேரத்தில் சாப்பிடுவது நச்சு எதிர்வினையை உண்டாக்கும். நச்சுத்தன்மையை அதிகரித்துவிடும்.
- கீரையில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அவை வாயு, வயிறு வீக்கம், குடல் வீக்கம் , வயிற்றுப் பிடிப்பு , வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற உபாதைகளை உண்டாக்கும்.
யாரெல்லாம் கீரை சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும் ?
- சிறுநீரக பாதிப்பு, சிறுநீரகத்தில் கல் இருக்கிறது எனில் அவர்கள் கீரையை அதிகமாக உட்கொள்ளக் கூடாது.
- மூட்டுப் பிரச்சனை இருப்பவர்களுக்கு கீல்வாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
- இரத்த அடர்த்தி அதிகமாக இருக்கும் நபராக இருக்கிறீர்கள். அதற்கான இரத்ததை மெலிக்கும் மருந்துகளை உட்கொண்டு வருகிறீர்கள் எனில் கீரையை குறைவாக சாப்பிடுவது நல்லது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US