சர்க்கரை நோயாளியா நீங்க? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!
சர்க்கரை நோயாளிகளின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது அவர்களது கண்களில் உள்ள விழித்திரை பாதிக்கப்படுவதுடன் அதில் உள்ள இரத்த நாளங்கள் பலவீனமாகும். ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியும் இருக்காது.
முறையான சிகிச்சை எடுத்து கொள்ளாவிட்டால் நாளடைவில் பார்வையிழப்பு உண்டாகும். ஆரம்ப நிலைகளில் இந்த நோயைக் குணப்படுத்த முடியும்.
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் கண் மருத்துவரை வருடத்திற்கு ஒருமுறை சந்தித்து கண்களைப் பரிசோதனை செய்து கொள்ளவும். மேலும் சர்க்கரை நோயால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..