மறந்து கூட இப்படி செய்யாதீர்கள்! தக்காளியை பிரிட்ஜில் வைப்பதால் ஏற்படும் ஆபத்து.. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
தக்காளி இல்லாமல் இந்தியர்கள் சமையலில் எந்த உணவையும் சமைக்கமாட்டார்கள். அதன் ருசி துளியாவது நாக்கில் தெரிந்தால் மட்டுமே சாப்பிடும் உணவு திருப்தியாக இருக்கும்.
இதனால் வீட்டில் அதிகமாகவே தக்காளியை சேமித்து வைத்திருப்பார்கள். வெளியே வைத்தல் அழுகிவிடும் பயத்தில் வார கணக்கில் பிரிட்ஜில் சேமித்து வருகின்றனர். பிரிட்ஜில் சேமிப்பதால் தக்காளி ஃபிரெஷாக இருக்கும் என்று கூறுவார்கள்.
ஆனால் அவ்வாறு செய்வதால் உடலுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்துவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சரி வாங்க தக்காளியை பிரிட்ஜில் சேமிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்..
தீமைகள்:-
- தக்காளியை வார கணக்கில் பதப்படுத்துவதால் அது உங்கள் முழு ஆரோக்கியத்தையும் கெடுத்து உடல் உபாதைகளை தரும். பிரிட்ஜில் உள்ள ஃப்ரியான் என்ற வாயு பதப்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களுக்குள் ஊடுருவி அவற்றின் தன்மையை மாற்றி விடும்.
- மேலும் தக்காளி மீது ஏதேனும் கிருமிகள் ஒட்டி கொண்டு இருந்தால் அதனையும் அதிக காலம் உயிர் வாழ செய்யும். தக்காளியை பிரிட்ஜில் வைத்து சமைத்து உண்டால் அதலில் உள்ள சத்துக்களை முற்றிலும் அழித்து சக்கையாக மாற்றி விடுகிறது.
- சிலர் தக்காளியை பல நாள் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக பிரிட்ஜில் வைப்பார்கள். இது அவற்றில் உள்ள என்சைம்களில் வேதி பொருளை மாற்றி விடுகிறது. அதுமட்டும் இல்லாமலா தக்காளியில் உள்ள 65 % ஊட்டசத்துக்கள் குறைந்தும் விடுகிறது.
- எப்போதும் சுத்தமான உணவுகளே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. காய்கறிகள் என்றாலும் பழங்கள் என்றாலும் அதன் தன்மை அவற்றின் கால அளவு மற்றும் பதப்படுத்தும் முறையை பொருத்தே தீர்மானிக்க வேண்டும்.