கவனமா இருங்க! காலையில் மறந்து கூட இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்
பொதுவாக ஒரு மனிதனுக்கு காலை உணவு என்பது மிகவும் அவசியம். அப்போது தான் நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஆனால் நம்மில் பலர் காலை உணவை தவிர்த்து விடுகிறோம்.
இதனால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகின்றது. அந்த வகையில் காலையில் குறிப்பாக வெறும் வயிற்றில் எந்த மாதிரி உணவுகளை சாப்பிட கூடாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..
நீங்கள் தினமும் காலையில் வாழைப்பழத்துடன் பால் சாப்பிடுபவரானால் கவனமாக இருங்கள். ஏனெனில் இந்த இரண்டையும் ஒன்றாக வெறும் வயிற்றில் உட்கொண்டால் அது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வெறும் வயிற்றில் பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக புளிப்புச்சுவை கொண்ட பழங்களான சிட்ரஸ் பழங்களை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை அசிடிட்டி பிரச்சனையை உண்டாக்கும்.
காரமான உணவுகளை எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள். ஏனெனில் காரமான உணவுகளில் உள்ள மசாலாப் பொருட்கள் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.
தக்காளியை வெறும் வயிற்றில் உட்கொள்வது ஆபத்தானதாக கருதப்படுகிறது. அவ்வாறு உட்கொண்டால் அது இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே தக்காளியை காலை உணவில் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள்.