தினமும் முகத்திற்கு மஞ்சள் பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ தெரிந்து கூட இந்த தவுறுகளை செய்து விடாதீர்கள்!
பெண்கள் தினமும் முகத்திற்கு மஞ்சள் தேய்த்து குளிப்பது மிகவும் பாரம்பரியமான ஒன்றாகும். ஆனால் பலர் தற்போது நாகரிகம் என்ற பெயரில் மஞ்சள் தேய்த்து குளிப்பதில்லை. சிலருக்கு உடலுக்கு மஞ்சள் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் கூறலாம். நாம் மஞ்சளை சரியாக பயன்படுத்தாதது இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஒரு பக்கம் மஞ்சள் நம் உடலுக்கு பல அற்புதமாக நன்மை வழங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் இதனை சமையலில் தினமும் சேர்த்து கொள்கிறோம். தோல் பராமரிப்பு தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் மக்கள் இதைப் பயன்படுத்தினர்.
ஆனால் அதை சரியாக பயன்படுத்துவதற்கான வழி நிறைய பேருக்குத் தெரியாது. இதனால் பல தவறுகளை செய்து வருகின்றனர்.
- ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு, பால் போன்றவற்றுடன் மஞ்சள் கலந்த ஃபேஸ் பேக்கை கலந்து முகத்தில் பயன்படுத்தி வந்தால் அது மஞ்சளுடன் வினைபுரிந்து சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே நீங்கள் அதை ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்த விரும்பினால் மஞ்சள் மற்றும் தண்ணீர் தவிர வேறு எதுவும் பயன்படுத்த தேவையில்லை.
- மஞ்சளை முகத்தில் தேய்த்து விட்டு நீண்ட நேரம் இருந்தாலோ அல்லது முகத்தில் நீண்ட நேரம் தடவினாலோ அது உங்கள் முகத்தை கறைபடுத்தும். எனவே உங்கள் சருமத்தில் அதிக நேரம் மஞ்சள் வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- மேலும் மஞ்சள் பூசி முகத்தை கழுவிய பின்பு நன்கு துடைக்கவும். சருமத்தைப் பராமரிக்கும் போது நம் முகத்தை நன்கு கழுவுவது மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். நம் தோலில் இருந்து மஞ்சள் நீக்கப்பட்ட பிறகு ஒருவர் அதை குளிர்ந்த அல்லது அறை வெப்பநிலை கொண்ட நீரில் நன்கு கழுவ வேண்டும்.
- நாம் அவசரமாக மஞ்சள் ஃபேஸ் பேக்கை பயன்படுத்தும்போது சீரற்ற முறையில் பயன்படுத்துகிறோம். இது நாம் தவிர்க்க வேண்டிய மற்றொரு பொதுவான தவறு. மஞ்சள் உங்கள் முகத்தை முழுவதுமாக மறைக்காததால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.