இளம்பெண்ணை சீரழித்து கொன்றுவிட்டு பிரித்தானியாவுக்குள் அகதியாக நுழைந்த நபர்... அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள ஒரு தகவல்
பிரித்தானியா ஆங்கிலக் கால்வாய் வழியாக வரும் அகதிகளை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டிவருவது நியாயம்தானோ என சில நேரங்களில் நினைக்கத் தோன்றுகிறது.
ஆம், ஆங்கிலக் கால்வாய் வழியாக அகதி என்ற போர்வையில் வந்த ஆப்கன் நாட்டவர் ஒருவர், சில வாரங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை சீரழித்துக் கொலை செய்துவிட்டு, தப்பி பிரித்தானியாவுக்குள் போலிப் பெயரில் நுழைந்துள்ளது தெரியவந்துள்ளதால், தற்போது தாலிபான்களுக்குத் தப்பி ஆப்கானிஸ்தானிலிருந்து வருவோரைக் குறித்தும் ஒரு வித அச்சமான சூழல் ஏற்பட்டுள்ளதைத் தவிர்க்க இயலவில்லை.
Rasuili Zubaidullah (22) என்னும் ஆப்கன் நாட்டைச் சேர்ந்த ஒருவன், ஆங்கிலக் கால்வாய் வழியாக அகதிகளுடன் படகு ஒன்றில் வந்து, போலியான பெயரில் பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ளான்.
அவன், சுமார் 15 நாட்கள் சொகுசாக ஹொட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், ஆஸ்திரிய பொலிசாரிடமிருந்து பிரித்தானிய பொலிசாருக்கு ஒரு இரகசிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியா நாட்டில் வாழும் Leonie என்ற 13 வயது பெண், இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிமுகமான Rasuili மற்றும் 16 வயது இளைஞன் ஒருவனை சந்திப்பதற்காக ஓரிடத்திற்குச் சென்றிருக்கிறாள். பிறகு மூவருமாக அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிற்குச் செல்ல, அங்கிருந்த ஒருவர் Leonieயின் பானத்தில் போதைப்பொருளைக் கலந்து கொடுக்க, அனைவருமாக Leonieயை கூட்டு பாலியல் தாக்குதல் நடத்தி, பின்பு அவளைக் கழுத்தை நெறித்துக் கொன்று, ஒரு போர்வையில் சுற்றி ஓரிடத்தில் வீசிவிட்டிருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் ஏற்கனவே நாடு கடத்தப்படுவதற்காக காத்திருக்கும் நேரத்தில்தான் Leonieயை சீரழித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் Rasuili பிரான்சுக்கு வந்து, அங்கிருந்து கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுத்து ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைந்திருக்கிறான்.
இதற்கிடையில், ஆப்கன் அகதிகள் சிலர் தாங்கள் ஒரு பெண்ணை சமூக ஊடகம் வாயிலாக சந்தித்து பாலுறவு கொண்டது குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பெருமையடித்துக்கொள்ள, பொலிசாரின் கவனம் அவர்கள் மீது திரும்ப, அவர்களை வலை வீசித் தேடத் துவங்கியுள்ளார்கள்.
சர்வதேச பொலிசாரின் தேடுதல் வேட்டையின் காரணமாக, தற்போது கைது செய்யப்பட்டுள்ள Rasuiliயை நாடு கடத்துவதற்கான நடைமுறைகள் துவக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தி, இப்போது இதேபோல் பல குற்றவாளிகள் ஆப்கன் அகதிகள் போர்வையில் பிரித்தானியாவுக்குள் நுழையலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், அடையாள அட்டை கூட இல்லாமலே பலர் வருகிறார்களாம்.
இந்த குறிப்பிட்ட சம்பவம், ஆப்கானிஸ்தானிலிருந்து குற்றவாளிகளும் தீவிரவாதிகளும் பிரித்தானியாவுக்குள் நுழையலாம் என்ற அச்சம் ஏற்படுவதற்கு ஒரு உதாரணமாக உள்ளது என்கிறார் புலம்பெயர்தலை கண்காணிக்கும் நிபுணர் ஒருவர்.