மு.க ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு கொரோனா! கடைசி நேரத்தில் முக்கிய மாற்றம்
திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி தங்கவேலுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியாகி இருப்பதால் அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்று முன்னர் தொடங்கியது.
இந்த நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலு கொரோனா தொற்று காரணமாக திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து புதிய அதிகாரியாக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் முக ஸ்டாலினும், அதிமுக சார்பில் ஆதிராஜாராமும் போட்டியிடுகின்றனர்.
ஸ்டாலின் போட்டியிடுவதால் இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது